ஏமனில் போர் குற்றப் புலனாய்வு நடத்த ஐநா மனித உரிமை ஆணையர் கோரிக்கை
கடந்த பத்து நாட்களில் 370 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏமனில் பொது மக்கள் பலியாவதில் திடீர் அதிகரிப்பு காணப்படுவதால், போர் குற்றம் நடந்திருக்கும் சாத்தியக்கூறு தொடர்பாக சர்வதேச புலனாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், செய்த் ராத் அல்ஹுசேன் தெரிவித்திருக்கிறார்.