பிரேசில்: குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை
ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள செல்வந்த பகுதிகளில் சிலவற்றில் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ள துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றில், குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் குழுவைச் சேர்ந்த குறைந்தது மூன்று உறுப்பினர்களை அந்நாட்டு போலீஸார் கொன்றுள்ளனர்.