தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்: 16 பேர் மீது வழக்கு
மாவட்ட நிர்வாகம் மாற்று வழி அமைத்துத் தருவதாக கூறியுள்ளது. ஆனால், சாதியைக் காரணமாகக் கூறி தாங்கள் சடலத்தை எடுத்துச் செல்வது தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய தலித் சமூகத்தினர், பொதுப் பாலத்தின் வழியாகத்தான் சடலத்தை எடுத்துச் செல்வோம் என்று கூறி சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.