மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமா, மொஹைதின் யாசினா? - நீடிக்கும் அரசியல் குழப்பம்
திடீர்த் திருப்பமாகக அன்வார் இப்ராகிம், மொஹைதின் யாசின் ஆகிய இருவரையுமே அரண்மனைக்கு வரவழைத்து பேசினார் மலேசிய மாமன்னர். அப்போது இரு தரப்பினரும் கூட்டணிகள், கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, நாட்டின் நலன் கருதி ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.