பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதை மாற்ற முடியுமா?
அரசமைப்புச் சட்டம் அளிக்காத எந்த பொறுப்பையும் ஆளுநருக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டுமென சர்க்காரியா ஆணையம் கூறியது. பூஞ்சி ஆணையமும் ஆளுநரே வேந்தராக இருப்பது பல சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அவர் அரசமைப்புச் சட்ட கடமைகளை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென்று சுட்டிக்காட்டியது.