கோவையில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மறுப்பு - செய்தியாளர்களை விமர்சித்த விவகாரத்தில் மீண்டும் சர்ச...
கோயம்புத்தூர் உக்கடத்தில் கார் வெடிப்பு நடந்த பகுதியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் மதத்தால் மக்களை பிளவுபடுத்த சிலர் முயன்றாலும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். பாஜக யார் மீதும் மத சாயம் பூசவில்லை," என்று கூறினார். ஆனால், செய்தியாளர் சந்திப்பின்போது அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரப்பட்டதால் அங்கு சலசலப்பு நிலவியது.