சென்னையின் முக்கிய ஏரிகளில் குறைந்துவரும் நீர் – ஒரு கோடி மக்களுக்குக் குடிநீர் கிடைக்குமா?
சமீபத்தில், தென்னிந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூரு கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்தது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. இது சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வருமா என்ற கேள்வியை எழுப்புகிறது.