இன்று இரவு இடியுடன் மழை
நாட்டின் பல பகுதிகள் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post இன்று இரவு இடியுடன் மழை appeared first on ITN News.